பெண்ணிய நோக்கில் அம்பையின் சிறுகதைகள்

Main Article Content

இ.மரிய செல்வி

Abstract

இலக்கியங்கள் அந்தந்த கால சமுதாயத்தைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. அத்தகைய இலக்கியங்களில் பெண்கள் முதன்மை இடம் பெறுகின்றனர். பெண் படைப்பாளர்களும் அவர்களின் வழி பெண்ணியம் குறித்த சிந்தனைகளைப் பதிவு செய்கின்றனர். பெண்ணியம் என்பது ஆணிற்கு இணையான சுதந்திரத்தை அடைவது மற்றும் பெண்கள் தனக்கு கிடைக்காத சுதந்திரத்தையோ அல்லது தவறவிட்ட உரிமைமையோ மீட்டெடுப்பதே பெண்ணியம் ஆகும். பெண்களின் வளர்ச்சியில் தான் இச்சமூகத்தின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. பெண்களின் உரிமைகளைக் காப்பதற்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பல இயக்கங்களும் பல பெண்ணிய எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அம்பை அவர்களின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் வாயிலாக பெண்ணியச் சிந்தனைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. 

Article Details

Section

Articles